Tiricirapuram makAvitvAn mInATci cuntaram piLLaiyin
pirapantat tiraTTu - part 2
tiruvAnaikkA akilANTanAyaki piLLait tamiz
(in tamil script, Unicode/utf-8 format)
திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி
திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்
சிவமயம்
திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்
பாயிரம்.
விநாயகக்கடவுள் வணக்கம்.
143.
சீருலவு வனசமகள் புரையுமட வார்களிக றீர்ந்தோ மெனக்களிப்பச் -
செறியுடுக் கணமுருவில் புத்தே டிகைப்பவிது தீங்கவள மென்றுததிதோய்,
காருலவு மாகநடு வட்பொலியு மாம்பலங் காதன்மதி மீப்பனையெழில் -
காட்டுங்கை நீட்டுமொரு கோட்டிரு பதத்திரி கடாக்குஞ்ச ரத்தை நினைவாங்,
கூருலவு கவரிலை யயிற்படை சுமந்தவெங் கோமா னுடற்கண்வாமங் -
கொண்ட கொண்டற்குழற் கொவ்வைவாய் வெண்ணகைக் கொம்மைமுலை யம்மை பைப்பூந்,
தாருலவு பொங்கரிற் செங்கதிர் மயங்குமொரு *சம்புவன மமர் தேவியைச் -
சகலவண் டமுமளிக் கும்பிராட் டியையுரைசெய் தண்டமிழ் வளம்பெருகவே. (1)
* திருவானைக்கா
பரமசிவ வணக்கம்
144.
தெள்ளமு துடற்கூன் மதிக்குழவி கொட்டவெந் தீயசஞ் சரவு கொட்டச் -
சேர்த்தசைக் குஞ்சடை முடித்தண்ட மிடியச் சினந்தொலிக் குந்து டித்துப்,
பள்ளவட வைக்கன றூங்குநிரி யாணப் பருங்கறை யடித்துரித்து -
பாயுழைக் கைத்துமுத் தலைசேர் படைத்துவெண் பலிகொளிரு நான்குதோட்டு,
கள்ளவித ழிப்பூந் தொடைத்துநுத னாறுசெங் கட்டுமண் டொட்ட கருமாக் -
காணவரி தாகுமிரு தாட்டெது வதைப்பணிபு கைகுவிப் பேமாறுகாற்,
புள்ளமர் மலர்த்தெரிய லார்தவள மாடமீப் போய்மதியை வான்யாற்றுவெண் -
பூங்குமுத மலரெனக் கைநீட்டு *காவையம் பூந்தோகை யைப்பாடவே. (2)
* திருவானைக்கா
பராசத்திவணக்கம். வேறு.
145.
வெள்ளநெடுஞ் சடைமுடித்தா ருடலப்பாகி வியந்துகவர்ந் துலக மெலா மளித்தன்பானோ,
ருள்ளமுழு வதுங்கவர்ந்து கொள்ளாநிற்கு மொருத்திபொற்றா ளருத்திகொண்டு ளிருந்துநிற்பா.
மள்ளலெழு முள்ளரைப்பூங் கம லக்காட்டி லளிகளிழிந் துழுதுழக்க வழிதேனாறு,
தெள்ளமுதக் கடன்மடுக்குங் காவை மேவுஞ் சிவஞானப் பிராட்டிதமிழ் செழிக்க வென்றே. (3)
விநாயகக் கடவுள் வணக்கம்
146.
கோமேவு மதிலொருமூன் றெரிக்கு ஞான்றெங் குனிமதிசெஞ்
சடைச்செருகும் பெருமா னன்பர்,
நாமேவு தமிழ்க்கொருபூங் கொடிபாற் றூது
நடந்தநா யகன்விநா யகவென் றேத்தி,
மாமேவு கதிர்க்காற்றேர் நடத்துமாறு வருமடிக
டிருவடிகள் வணக்கஞ் செய்வாம்,
பூமேவு திருக்காவை மேவுஞானப் பூங்கோதை
பாடல்வளம் பொலிய வென்றே. (4)
சுப்பிரமணியக்கடவுள் வணக்கம். வேறு
147.
இரசத விலங்கன்மிசை யொழுகருவி புரையவீ ரிருமருப் பாம்பன் மாறா -
திழிமுக் கடாம்பொழிய மென்சினைப் பைந்தரு விளங்காடு நறவு பொழியச்,
சுரபிபல் வளன்பொழிய வேமவுல காளுமொரு தோன்றன்மனை யாட்டி கண்டஞ் -
சூழுமங் கலகா ணறாதுறை கழித்துவே றொட்டவனை யஞ்ச லிப்பா,
முரகம்வல் விலங்குதுடி நவ்விமுத லமலர்மே லுரறிவரு காலை யிற்றன் -
னொளிரவ யவங்களிலொவ் வொன்றுகண் டொவ்வொன் றொதுங்கியவர் கையடையவப்,
பரமரிட மகலா திருந்ததுணை யைப்பைம் பசுந்தோகை யைக்காவைவாழ் -
பச்சைப் பசுங்கிளியை வாழ்த்துமெந் நாவுரைசெய் பாடலில் வளம்பெருகவே. (5)
நந்திதேவர் வணக்கம்.
148.
புள்ளேறு நேமியம் படையுடைக் குரிசிலும் பூந்தவி சுகந்து ளோனும் -
பொதுளுஞ் சினைத்தரு நிழற்கோனு மமரரும் புகலவரு மெங்கோ னவைக்,
குள்ளேறு மாறுத வெனச்சிறிய வாய்மொழி யரைத்தடரும் வேலை யவர்வா -
ளோங்குமணி முடிசிதற வேத்திரப் படையெடுத் தோச்சுவா னைத்துதி செய்வா,
முள்ளேறு தாட்பா சடைக்கமல வாலியின் முழங்கிய வரால்வெடி கொளா -
மோட்டெருமை பாயுமொலி கேட்டுள நடுங்கியலை முந்நீர் மடுத்து மடவார்,
கள்ளேறு பைந்தொடைகொ ளைம்பால் கடுக்கக் கறுத்தமுகில் வரையி னேறுங் -
காவைப் பிராட்டிக் குரைக்குமெஞ் சிறியபுன் கவியவள் செவிக் கேறவே. (6)
திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் வணக்கம்.
149.
தீயேறு கைத்தலத் தையரரு ளாற்பொருவில் சிரபுர மறைச் செல்வரிற் -
சிவபாத விருதயர்த மதலையாய் ஞானந் தெவிட்டவுண் டாண் பனையெலாங்,
காயேற வரவின்வாய் முள்ளெயிற் றிழிகொடுங் கடுவேற வீந்த வொருவன் -
கடத்திலுயி ரேறவள வன்றிரு மகட்குட் களிப்பேற மதுரை நகர்வாய்ப்,
பாயேறு மிடையுடை முடைப்பறி தலைச்சமணர் பதறவுடு மேடு கனலிற் -
பைம்பசப் பேறவொரு குடிஞையெதி ரேறவைப் பதகர்வலி யக்கழுவினிற்,
போயேற வினியபதி கம்பாடு மையனடி போற்றுவாம் வெண்ணொவலெம் -
புண்ணிய னிடப்பாக நண்ணிய பிராட்டியைப் புகழுமெங் கவிதழையவே. (7)
திருநாவுக்கரசுநாயனார் வணக்கம்.
150.
அருங்கலை விளங்குதிரு வாமூரி லோங்குவே ளாண்குலப் புகழனாருக் -
கணிதிலத வதியா ருதித்தபி னுதித்தறமி லமணரிடு மலையெறிபெருங்,
கருங்கடல் கடந்துலக முழுதுமொரு கழலாற் கடக்குமொ ரிலச்சினையுடன் -
கவரிலைவை வேலிலச் சினையுமிரு தோட்கட் கலந்திடப் பெற்றனையுமா,
ளிருங்கருணை யார்வீழி மிழலையிற் பொற்பீடமெறிகா செடுத்ததிருவாக் -
கென்கோனடித்தலம் வழுத்துவேன் கோட்டெயிலி லிட்டகொடி முட்டநெடுவான்,
வருங்கலை மதிக்குடல் கிழிந்திழியு மமுதமணி மறுகுபெரு கிக்கிடங்கர் -
வாய்மடுக் குங்காவை யம்மைக் குரைக்குமென் வாய்த்தமிழ் வளம் பெருகவே. (8)
சுந்தரமூர்த்திநாயனார் வணக்கம்
151.
மங்கலம் பொலிநாவ லூர்மறைச் சடையனார் மகவா யுதித்தெமிறைவன் -
மணம்விலக் காவணங் காட்டிட வருட்டுறையுள் வந்தருட் டுறையளவளாய்க்,
கொங்கலர் குழற்பரவை குயமணைந் தினியதமிழ் கூறியுடல் கொண்டு முதலை -
கொண்டபொருண் மீட்டுக் கடாத்திரி நடாத்துமெங் கோமானை யஞ்ச லிப்பாஞ்,
செங்கமல வங்கையி லிலங்கிழைகாண் மங்கையர் திரட்சியம் மனையெடுத்துச்-
செறுசுடர்கொ ணவமணி குயிற்றுமணி மாடமேற் சென்றிருந் தோச்ச வமரர்,
தங்களர சூருமுத் தானமலை கவளமிது தானென நெடுங்கை நீட்டுந் -
தண்காவை யம்பிகைக் கடியே னுரைக்குமொண் டமிழ்வளமிகபெருகவே. (9)
மாணிக்கவாசகசுவாமிகள் வணக்கம்.
152.
கடிமதில் வளைத்தகூ டற்றேன் பிலிற்றுமொண் கண்ணிநிம் பற்கிருமையுங் -
காட்டிவெம் புத்தர்களை யோட்டியெங் கோன்செவி களிக்கவாக்குமத மூட்டி,
முடிவில்பர மானந்த வெள்ளத் திரைக்கடலுண் மூழ்கித் திளைத்திருந்த -
முதல்வர்நந் திருவாத வூரடிக ளடிகளை முடிகணிய தாக்கி நிற்பாந்,
துடியிடை நயங்கண் டொதுங்கிமா சுணமண் சுமக்கமுதி ராவிளமுலைத் -
துணைகண் டுடற்சிலம் புடல்வளைய நெய்த்துநெரி சுரிகுழற் கண்டுததிபோய்ப்,
படியுமுகி லலறிவரை முகடேற விழிகண்டு படையுறை புகுந்தடங்கப் -
பனிமலர்ச் சோலைதிகழ் காவைவரு மிமயநன் பாவைசொற் றமிழ்தழையவே. (10)
தண்டீசநாயனார் வணக்கம்
153.
வாரிசூ ழுலகுபுக ழுந்திருச் சேய்ஞலூர் மறைவாணர் குலம் விளங்க -
வருமெச்ச தத்தர்மரு வானா வுதிதரிய மறைநான்கு மோர்ந்து தௌிவாய்ச்,
சீரிலகு சைவநெறி யொழுகுஞான் றொருஞான்று செங்கோக் குழாமருந்துந் -
தேந்தளவ னொருசுரபி மீபருந் தண்டாற் சினந்தோச்சல் கண்டுதானே,
யூரிலம ராவின மொருங்கவொரு கோலெடுத் தோம்பிவயி றாரவூட்டி -
யொழுகுதீம் பால்கொண்டு வாலுகத் தாலெந்தை யுருவுகண் டாட்டி யொளிர்பைந்,
தாரியைய விட்டஞ் சலித்துவரு நாளில்லத் தந்தைதா ளறவெறிந்தோன் -
றனதா டுதிப்பமுயர் தண்காவை யம்பிகை தமிழ்க்குவளன் மிகவளரவே. (11)
திருத்தொண்டர்கள் வணக்கம்.
154.
காயமன வாக்கொன்ற மும்மல மொரீஇச்சைவ காவியங் கற்றறிந்துங் -
கனசரியை கிரியையோ காதிஞா நந்தேர்ந்க்து கந்துமவ வழிபயின்றுந்,
தீயபிணி யாம்பந்த பாசமூ லங்கெடச் சிதறிஅயெனை யாண்ட முக்கட் -
சென்சடாடவியண்ண றிருவடியின் மருவிய திருத்தொண்ட ரைப்பரவுவாந்,
தோய்நிறை பண்ணையி னறாக்கமல மலரைச் சுரும்பலறி முரலப்பசுஞ் -
சூட்டெகின மேங்கவளை கோட்டெருமை மேய்ந்துநெற் சூற்பயிரை வாய்குதட்டிச்,
சேயகுமு தத்தடம் பாயவத் தடவாளை சேண்முகிற் கீண்டுபாயுந்த் -
தென்காலை மேவும் பிராட்டிக் குரைக்குமெஞ் செந்தமிழ் நலம்பெருகவே. (12)
அவையடக்கம்
155.
பொங்குமலை நீர்பருகு மொருமுனிவ வமர்நறும் பொதியத் திருந்தெழுந்து-
புன்னைவீ யின்றா தளைந்தவிள மென்சிறு புதுதென்றல் வந்தரும்ப,
லெங்குமொளிர் செந்தழ வரும்புதே மாவட ரெழிற்காவை யம்பதியின்மே-
வெம்பிராட் டிக்கியா னுரைசெய்பிள் ளைக்கவியி தென்போ லிருக்குமென்னிற்-
நங்குமூ தறிவுடைய சான்றோ ருறுந்தெய்வ சைவநெறி யொழுகு வோரில் -சங்
கத்து மெய்ப்பொரு ளுணர்த்து நூல் புகலுவது தான்கேட் டெழுந்து தீம்பால்,
செங்குமுத வாயொழுக மந்தமந் தச்சென்று தேருமக் கழகமுற்றோர் -
சிறுமடல்கை பற்றியொரு சிறுகுழவி குழறுஞ் சிறப்பினுக் கொக்குமன்றே. (13)
காப்புப்பருவம்
திருமால்.
156.
பூமேவு வெண்ணாவ னீழலமர் முக்கட் புராதனர்க் கின்பவெள்ளம்-
பொங்கித் ததும்பிமீ திட்டுவழி தரவலர் புரத்தொரு புறத்த மர்ந்து,
மாமேவு மண்டம் புரக்குமட மானையெழில் வாய்த்தசெந் தேனை யொளிர் செவ்-
வாயனத் தைக்கருங் குயிலைப் பசுந்தோகை மயிலைப் பரிந்து காக்க,
தேமேவு துளபப் பெருங்கா டளிக்குமிருள் சீத்துத் திசாதிசை தொறுஞ்-
சேயொளி பரப்புங் கவுத்துவத் தொருமார்பு திருமார்பு முலை பொருந்தக்-
கோமேவு மகவான் முதற்புலவர் மார்பலர் குலக்கொடிகண் முலைபொ ருந்தக்,
கொழுமுழுத் திண்கிரியை யேராழி யிடையிட்ட கூராழி யங்கைமுகிலே. (1)
சம்புநாயகர். வேறு.
157.
மதிநதி தும்பை வாச விதழிக ரந்தை நாகம் வனைசடை முன்கு லாவு புண்டரக் கீற்றினர்-
வழுதிமு னந்து வாய நரிபல கொண்டு தாவும் வலியய மென்று கூறி யங்குறத் தோற்றினர்-
மகரம லம்பு நீரி லமரர்க ளஞ்சி வாடி மறுகுற வந்த காரி கண்டமட் டேற்றினர்-
மறையினொ டங்க மாறும் வலவர்க லங்கு றாதொர் வடநிழ லின்பு றாவ மர்ந்துறத் தேற்றினர்,
கொதி கொள் சுரந்தண் மேவ நிழல்விரி பந்த ரூடு குளிர்புனல் கொண்டு சாலின் மொண்டெடுந் தூற்றினர்-
குலமலை நின்று தாழ நறமலை வின்றி மேவு கொடுமுடிதங்கு மேரு விண்டெடுத் தாற்றினர் -
குவிகையு டன்க ணீர்கொ டுருகுவர் துன்பமான குவிதல்கொள் பஞ்சை வாரும் விஞ்சருட் காற்றினர் -
குடபுல வந்திமானு முடனிற கம்ப ரீறில் குணமலி சம்பு நாதர் மென்கழற் போற்றுதும்,
அதிகர சங்கண் மீறி யருமையி தென்று பேசு மமுதையி கந்து பேசி டுங்குயிற் பேட்டினை -
யனுதின மும்ப ராவி வழிபடு மன்ப ரான வடியவர் கண்களார நின்றமெய்க் காட்சியை -
யவிர்கதிர் குன்ற வீசு மணிகள்சு மந்த வாசமலர்தரு கொம்பை யேட விழ்ந்துமிக் கூற்றெழு -
மருநற வுண்டி ராக மிடறுதி றந்து பாடி யளிகளி ருந்து வாழ்சு கந்தநற் றூட்பொதி,
வதியும லங்கன் மேவு மளகவ ரம்பை மாதர் வனசமி ருந்த மாதர் கும்பிடத் தோற்றிய -
மயிலைவ ளங்கு லாவு மணியைவி ளங்கு சோதி வடிவைந றும்ப டீர குங்குமச் சேற்றளை -
வனமுலை கொண்டு லாவு கொடியையி ருண்ட சோலை மதுமடை விண்டு பாயு மம்புயப் பூச்செறி -
மடுவைய லம்பி வாளை கமுகைய டர்ந்து பாய மலிவள மொன்று காவை மங்கையைக் காக்கவே. (2)
விநாயகக்கடவுள். வேறு.
158.
சீர்பூத்த வன்பரிடும் வெள்ளரிக் குவையைத் திரட்டிச் சடைக்கண் வாரித்
தின்றுகரு மாசுண மெனக்கூனன் மதிமுகில் செறியப் புழைக்கை நீட்டித்
தார்பூத்த வச்சடைக் கமலமொண் டுண்டுகட் டழல்கண்டும் வெருவாதுதன்
றந்தையென வெந்தையிட முலவுந் திருக்குஞ் சரக்கன் றினைப் பணிகுவா
நீர்பூத்த முள்ளரைப் பாசடைப் பூங்கமல நிறைநறை யிழிந்து பாய
நெட்டித ழவிழ்க்குமொரு வட்டமலர் மாளிகையு ணீங்கா திருந்து வாழுந்,
தேர்பூத்த வல்குன்மட வாரிரு வருந்தனைச் சிந்திப்பர் கட்பொருந்தத்
திருக்கட் கடைப்பார்வை செய்யுநன் காவையமர் தேவியைக் காக்க வென்றே. (3)
முருகக்கடவுள். வேறு.
159.
கறைவாய கண்டத் தெம்பெருமான் கரகங் கணங்கள் கரந்து சடைக்
காட்டு நுழைய மால்கரச்சங் கத்து ளவன்பாய் புகுந்தொளிக்கச்,
சிறைவாய் மஞ்ஞைப் பரிநடத்தித் தேம்பாய் தருவி னிழற்பிறந்த
தெய்வக் களிற்றை மணஞ்செய்த செவ்வேண் மலர்த்தா டலைக்கொள்வாந்
தரைவாய் மணிமுத் தளைகொழிக்குஞ் சலதி மடுத்த சூன்மேகந்
தவழ்ந்து திரிவ தேய்ப் பமத சலமூன் றுடைமா திரம்பயிலு
நறைவாய் வனத்து ளுயர்ந்தெழும்வெண் ணாவன் மருங்கு முளைத்ததுகிர்
நாகத் தொருபாற் படர்ந்தபச்சை நறுப்பூங் கொடியைப் புரக்கவென்றே. (4)
நான்முகன். வேறு.
160.
ஒலிகெழு மலையலை பருமுத் தாக்குட முறழ்வரி வளைவயி றுமிழ்பொற் பாற்கட
லுவகையொ டெழுமொரு மதியைப் போற்கய லுகண்மடு நடுவெழு பசுமைச் சூட்டனம்
வலியய மெனநனி கடவிச் சீர்ச்சித மலர்மிசை வதியுமொ ரெகினப் பேட்டினை
மறையுறை கடையடை யெனவைத் தாற்றிய மலர்தரு மலர்மக னுலகைப் பூத்தவன்
புலியத ளிடையிடை சுலவக் கூக்குரல் புரிபரி புரமடி யலறப் பாப்பணி
பொலிதர முழவொடு புவிவிட் போற்றிடு பொதுவினி னடமிடு மழுவைத் தூக்கிய,
மலிசடை யவர்மகிழ் துணையைத் தீத்தொழில் வலியவென் முடிமிசை யடியைச் சூட்டிய
மணியைமென் மலர்விரி கொடியைப் பூத்தொளிர் மதகரி வனம்வரு மயிலைக் காக்கவே. (5)
இந்திரன். வேறு.
161.
மோகத்தை யாங்கொண்ட போதெலா மிக்கின்ப முனியா தளித்திடுச்சி
மொய்குழ னுசுப்புமுலை சொற்பகைக் களிவையென முராரிமகிழ் வெய்தவேறி,
மேகத்தை யோட்டித் திசாதிசை திரிந்தலைய மின்னைத் துரத்தி யோங்கும்
வெற்பைத் துணித்தமுதை வாய்பெய்து தருநீழல் மேவுமொரு கடவுள் காக்க
நாகத்தை வாங்கிய பிரானியற் பகைமனையை நண்ணியது மதிலி லங்கை
நாதன்மனை விக்கின்ப நல்கியது மொருபூவ ணத்துடைந்ததுமி ராவித்
பூகத்தை யனையகந் தரமாது பாற்றாது போனதுமு ளோர்ந் திடைவிடாப்
புந்திச் சிறைப் படுத் தொளிர்காவை மேவுநம் புண்ணியப் பூங்கொம்பையே. (6)
திருமகள்
162.
முத்தநகை லிதுமுகப் பொதுவியர் கடப்பான் முழுக்கவன் றாழ்வலித்து
மூடுங்கவாடந் தடிந்துமனை புக்குண முனிந்தவர் பிணித்த டிக்கும்,
மத்தடி பொறுத்துவரு துணைமுகிலை யுண்டுகண் வளர்ந்துறைதி யென்று தன்னை
வயிறுளைந் தீன்றவொரு பாற்கடற் குடியாக்கு மடமானை யஞ்ச லிப்பாங்
கொத்தவிர மத்தமணி வெண்பொற் பிறங்கற் குலாவும் பெருங்க ளிற்றைக்
கூடிப் பயந்தவொரு கோட்டடன் மழக்கன்று கூடிவிளை யாட னாடி
யத்தவுல கக்களிறு பாறாவீ றேறுமத வத்தியா ரணிய மேவு
மமையம் பிறங்கவள ரிமையம் பிறந்தபிடி யைக்காத் தளிக்க வென்றே. (7)
கலைமகள்
163.
வாவியம் போருக மலர்த்தவி சுறுங்கடவுள் வாக்கினுமெ னாக்கினுநறா
வழியுஞ் சிதத்தகட் டேடவிழ்க் குங்குமல மனையினுங் குடிகொண்டு பொற்
றூவியந் தொற்றாட் கருங்கடல் கொழித்தசெந் துகிரனைய வாய்ப்பசும் பொற்
சூட்டெகின மேறும்வெண் பேட்டெகின மலர்மென் றுணைத்தா டுதித்து நிற்பாங்
காவியை முனிந்துசண் பகமீக் குதித்தொளிர் கனங்குழைய மோதி டுங்கட்
கட்பிலிற் றுந்தெரியல் சூழ்ந்தளிகண் முரலக் கனந்கதற வாட்டு மைம்பாற்
றேவியைச் சகலவுல கும்புரக் கும்பெருஞ் செல்வியைக் கருணை பூத்த
திருவைத் தடம்பணைத் தென்காவை யம்மையைத் தினமும் புரக்க வென்றே. (8)
காளி
164.
விரிவுற்ற பையரா நண்ணுலகு மண்ணுலகும் விண்ணுலகு நன்கு காக்க
வெற்றிகொ டெடுத்தெனக் கைத்தலையின் முத்தலைய வேல்பரித் திறுமாந்து நீங்,
கருவிற் பொலப்பெய ரனைத்தெறப் பொற்றறி யகட்டைக் கிழித்தெழும்பே
ராளரி திகைக்கவொரு கோளரி யுகைத்திவரும் யாளிப் பிணாவளிக்க
செருவற் றொடுன்கிக் கருஞ்சுரும் பிட்டவிற் செஞ்சுவைத் தண்டனிறவெண்
டிரிபுண் டரத்தநுதல் வெம்புலிங் கங்கொட்டு சம்புலிங் கப்பெமானை
மருவிப்பன் மான்கண்மதர் நோக்கமறி யச்சூழ மற்றுமொரு மான்வயிற்று
வந்தகுற மான்முறை பொருந்தமுக் கடமான் வனத்துவரு மட மானையே. (9)
சத்தமாதாக்கள். வேறு.
அனமிசை யேறி யுலாவற் றொடுத்தவ ளடுபுலி கீறிய தோலவைத் துடுத்தவ
ளசுரகு லாதிபர் சாயப் படுத்தவ ளலைகட னீரழ லாகக் கடுத்தவ
ளினமடர் பாரையொர் கோடிட் டெடுத்தவ ளிறையொடு மாமலை யேகற் றடுத்தவ-
ளெரிகவர் வேல்கொடு காவற்க டுத்தவ ளெனுமெழு மாதர்க டாளைத் துதிககுதுங்,
கனமலி வாய்வரல் போலச் சினத்தெழு கடமிழி தோல்வர வோதைப் பரிப்படை -
கடலலை போய்வர மேருக் கிரிப்புரை கதிர்விடு தேர்வர வீரப்புயப்படை,
வனம்வர வானவர் பாறக் கறுத்தெதிர் வருமொரு தாருக னோடத் துரத்திய -
மதலையு லாவுக வானுத்தமப்பொழில் வளமலிகாவைநன் மாதைப் புரக்கவே. (10)
முப்பத்துமூவர். வேறு.
166.
வேலையினுத்தவிடம் வைத்தகிரிபத்தனௌி தற்புக்களிப்போடு காணவெதிர்நிற்பவு -
மேவிரதமுக்கனிச ருக்கரைமுதற்சுவைகள் கைப்பத்தமிழ்ப்பாடல் நாநனிகொழிப்பவும் -
வீறுறுசிவத்தலகந டக்கநடைகற்றிலனெ னப்பெற்றநற்றாதை தோளிடைபரிப்பவும் -
வீழிமிழலைப்பதியெ னப்பன்மணியப்புபடி வைத்திட்டபொற்காசு நாடொறுமெடுப்பவு,
மாலைமதிவைத்தகுடி லப்பரனெனச்சிவிகை பெற்றுத்தொனிக்காள மோடுகுநடத்தவு -
மாமறைவனக்கதவ மெய்ப்புகழரெச்சமு னடைப்பச்சிறப்பூறு வாயமுதுகொட்டவும் -
வாரிலைகண்மொய்த்தபுரு டப்பனையிலப்பொழுது கொத்துக்குலைக்காய்கு லாவவருள்வைப்பவு -
மாதரரசிக்குமொர்கு லத்திறைதனக்குமு ளுவப்பப்பொறித்தோலை காணுபுவியப்பவுங்,
காலைவருசெக்கதிர்க டுப்பவொர்கடத்துறுவெ ளெற்புக்குணத்தோடு மாதுருவெடுப்பவுங் -
காணியிதெனக்கொண்மட னிற்செறுநர்வைத்ததம வெப்பத்தழற்சீறி மாறனுடறைப்பவுங் -
காய்சினவழற்குண்மடல் பச்செனவெடுத்துவரை கொட்பப்பெருக்கேறு நீரெதிர்செலுத்தவுங் -
காருடலுடைப்பறித லைச்சமணர்முற்றநெடு விட்டொட்டமுட்டாரு மீயிவரவைப்பவும்,
சோலைபுடைசுற்றமது ரைப்பதிமுதற்பதிமு ழக்கத்தழைத்தோகை நீறுகைகுழைப்பவுந் -
தோமில்புகலிக்குரிசி லுக்கமுதளித்தகுயி லைப்பொற்றகட்டூடு மாமணிகுயிற்றிடுஞ் -
சூழெயின்மதக்கரிவ னத்தமரனத்தையிரு செப்புத்தனப்பார மாமயிலைநித்தலுஞ் -
சூரியர்மருத்துவரு ருத்திரர்வசுக்களெனு முப்பத்துமுக்கோடி தேவர்கள்புரக்கவே. (11)
காப்புப்பருவம் முற்றிற்று.
செங்கீரைப்பருவம்.
167.
பங்கய மலர்த்திவரு செங்கதிர் நிறத்தவுடல் பனிமதி நிறங்கொளாது -
படரரி மதர்த்தகண் குழியாது நாடிகள் பசந்துநா றாதுநுனைவாய்,
கொங்கைகள் கறாதுமட் சுவைநாப் பெறாதகடு குழையா துறாதி னம்பல் -
குறிபடா தருமையொ டுயிர்த்திமய மாதேவி குளிர்பு னல்பொன் வளைகுளிறிடும்,
அங்கையி லெடுத்தாட்டி நீறிட்டு மட்காப் பணிந்தொழுகு திருமு லைப்பா -
லார்வமொ டருத்தவுண் டயறவழ்ந் தேறிமலை யரையன் புயத்த வன்பொற்,
செங்கைவிரல் சிரமீது பற்றிநின் றாடுமயில் செங்கீரை யாடியருளே -
தென்காவை யம்பதி செழிக்கவரு மென்னம்மை செங்கீரை யாடியருளே. (1)
168.
காராடு மாடமலி கூடலிற் பொன்மாலை கைநின் றிழிந்த வண்மடிக் -
கட்டவழ்தல் கண்டுவந் தம்மைவா வென்றிரு கரத்துவிர னீட்டு நிம்பத்,
தாராடு மார்பனிரு குழையிருகை பற்றியத் தடமார்பு தாழ்ந்தொ ளிரும்வெண் -
டண்டரள மாலையி னிருந்துமற் றொருமாலை தாளுதைந் தூசலாடி,
வாராடு மிருமுலை சுமந்தமட வார்தொடர வளருமும் முலைசு மந்து -
வானாடு முதலபல நாட்டுங் கயல்கட்டி வடகயிலை சென்று பொதுவிற்,
சீராடு மெந்தையொடு போராடு மொருபூவை செங்கீரை யாடி யருளே -
தென்காவை யம்பதி செழிக்கவரு மென்னம்மை செங்கீரை யாடி யருளே. (2)
169,
கற்றிணி தடம்புயக் காருடற் றிமிலர்மீன் கையுறை யளிப்ப வாங்கிக் -
காவல்புரி நெய்தலங் கண்ணிய னளாவிக் கடற்றுகிர் படர்ந்த மனையிற்,
பொற்றிகழ் முலைச்சிலை சுமந்திடை நுடங்கவாள் பொருவுதங் டட்பகையெனப் -
புலான்மீ னுணக்குத றணந்துமுக மன்பல புகன்றுமகிழ் குரவை குழறிச்,
சுற்றியெம் பெருமான் குடம்பைதோட் சூட்டச் சுறாவிலைப் பைம்பொற் கலன் -
சூட்டிவலை முடியமுண் மடற்றாழை யம்போது சுரிகுழற் குறமு டித்துச்,
சிற்றிடை யளத்தியர்கள் கொண்டாடு மொருமங்கை செங்கீரை யாடி யருளே -
தென்காவை யம்பதி செழிக்கவரு மென்னம்மை செங்கீரை யாடியருளே. (3)
170.
அஞ்சியய ருங்கமல மின்றட லுடைத்தா யடர்த்ததென நாணியுடல்கூ -
னாகிய மதிக்கொழு நனைக்கண் டரற்றிடு மரக்காம்பன் மான மணிவாய்,
வெஞ்சினஞ் சிறிதெழலி னாற்சின்மொழி கழற்றுவண் விரவரவு துவள லேய்ப்ப -
மின்னிடை தளாடமந் தாகினி யெனும்பெயரள் வெந்நிடை தவழ்ந்துமாலை,
மஞ்சினொளி பாய்புய வரைக்கட் டவழ்ந்துமகன் மார்பவெண் பொடிக ரைத்தும் -
வண்கைவாழ் கழிதலை புகுந்துமறு கச்சடை வனஞ்சேப்ப வெந்தை முடிமேற்,
செஞ்சிலம் போலிடு மடிக்கமல நீட்டினவள் செங்கீரை யாடி யருளே -
தென்காவை யம்பதி செழிக்கவரு மென்னம்மை செங்கீரை யாடி யருளே. (4)
171.
நந்தாத செல்வச் சிலம்பரசன் மனையாட்டி நகிலொழுகு பாலுண்டுபுன் -
னகைநாற வவள்வா யுமிழ்ந்துந் துகிர்ப்பாவை நயமொழி மொழிந்தெடுத்து,
வந்தாவல் பூண்டணி யணிந்துந் தருப்பாவை வல்லிடையின் மெல்லிடைத்தான் -
வனையுமென் சிறுசீரை சுற்றியுஞ் சுடராடி மன்னுநிழ லைக்கூவியுஞ்,
சந்தார் திருத்தாதை யகன்மார் புழக்கித் தவழ்ந்தும்விளை யாட்டயர்தல் போற் -
றண்காந்த ளங்கைக ணிலத்துற நிமிர்த்துமந் தாகினிப் புனலலம்புஞ்,
செந்தா மரைச்சரண் கோட்டிப் பிராட்டிநீ செங்கீரை யாடி யருளே -
தென்காவை யம்பதி செழிக்கவரு மென்னம்மை செங்கீரை யாடி யருளே. (5)
வேறு.
172.
கெண்டை யிரண்டு மருண்டொரு முளரி கிடந்து நடந்தாடக்
கௌிறொரு பதுநில மகனை விடாது கிளர்ந்து தளர்ந்தாடக்
கொண்ட றிரண்டொளி ருச்சியின் மீது குவிந்து கவிந்தாடக்
குமுத மலர்ந்தபொன் முளரி பிறந்தெழு குறுவெண் மணியாடத்
துண்டு படுங்கலை மதியிற் கட்டிய சுட்டி யசைந்தாடச்
சூழ்ந்திரு காந்த ளடிப்படி வண்டு சுழன்று முரன்றாட
அண்ட மனைத்து முயிர்த்த பொலங்கொடி யாடுக செங்கீரை
அத்தி வனத்தம ரத்த ரிடத்தவ ளாடுக செங்கீரை. (6)
173. பாத சதங்கை புலம்பு சிலம்பு பதிந்து பொதிந்தாடப்
பால்வளை யிற்சுட ராகை குயிற்றிய பல்சுடர் மணியாடக்
காதள வுங்கயன் மோது நறுங்குமிழ் கதுவிய முத்தாடக்
ககனத் திடைபொலி மின்னலின் மின்னிய கனவிரி சிகையாடத்
தாதவிழ் நறுமென் குமுதத் தமுதொடு தழைகுறு நகையாடத்
தழைதரு மரகத நிழல்விரி மேனித் தண்ணெனு மொளியாட
ஆதவ னொளியென வென்னுட் பொலிபவ ளாடுக செங்கீரை
அத்தி வனத்தம ரத்த ரிடத்தவ ளாடுக செங்கீரை. (7)
174. மருங்கணை யாடைகை வெந்நிட் டுதையா மலரடி கன்றாமே
வாயமு தூர லளித்த விரற்படு மண்ணென வெண்ணாமே
கருங்குயின் மென்குரல் விம்மிப் பொருமிக் கம்மிப் போகாமே
கயலீன் முத்தென நுண்டுளி முத்திரு கட்கயல் சிந்தாமே
சுருங்கு மருங்கு றுவண்டற வுந்தித் தொந்தி ததும்பாமே
சூழ்சுடர் மேனிப் புழுதி பொருந்தத் தொட்டும ணளையாமே
அருங்கலை மேகலை யாக வணிந்தவ ளாடுக செங்கீரை
அத்தி வனத்தம ரத்த ரிடத்தவ ளாடுக செங்கீரை. (8)
வேறு.
175. கடல்சுவ றிடவட வுடல்வரை பொடிபடல் கண்டோ டுங்காலன்
கடவிய முதுபக டடியொடி படவெரி கண்கா லும்பீழைப்
படவர வுடலடல் விடநெடு நிலமகள் பண்பா டுங்கீதம்
பயிறுள வுழவனை முனிதர வமரர் பயந்தீ ரென்றோல
மிடவிள முளரியில் வளர்பவன் முதலிய ரெந்தா யெங்கோவே
யெனமுனர் வருமசு ரர்கள்பொடி படவலி யெஞ்சா நின்றோர்வேல்
திடமொடு தொடுமொரு மதலையை யுதவினள் செங்கோ செங்கீரை
சினமுடை மதகரி வனம்வரு மொருமயில் செங்கோ செங்கீரை. (9)
வேறு.
176. நெக்குரு கிக்கசி வுற்றவர் கட்டனி நின்றா டுந்தோகாய்
நெட்டுட லப்பன கத்தலை நிற்குநி லந்தா ழும்பாவாய்
மைக்கரு மெய்ப்புயல் பிற்பொலி வுற்றுவ ரும்பூ மென்கோதாய்
மட்டுவி ரித்தெனு ளக்கம லத்துறும் வண்டே தண்டேனே
அக்கர வப்பணி முக்கணர் பக்கல மர்ந்தீ ரைந்தாறோ
டத்தொகை பெற்றவ றத்தைவ ளர்க்கும ணங்கே கொங்கேறுஞ்
செங்கம லத்தைந கைக்குமு கக்குயில் செங்கோ செங்கீரை
சித்திய ளித்திடு மத்திவ னத்தவள் செங்கோ செங்கீரை. (10)
செங்கீரைப்பருவம் முற்றிற்று.
தாலப்பருவம்
177.
சேற்று மணிகள் சலஞ்சலங்கள் சிதறிச் சிலம்ப ஞிமிறலறச்
செந்தா மரையின் வெள்ளிமுளை சிந்தித் தெறிக்கச் சினைவாளை
நாற்று வயலிற் குதிக்கவளை நடுவட் கயல்க ளொளிக்கநடு
நடுங்கிக் கமடஞ் சுரிக்கவரா னாரம் புரண்டு துடிக்கமது
வூற்றுங் குமுதம் படைச்சாலி னூடே யரையக் கருங்கடைஞ
ருழும்வெம் பகட்டை யுரப்பமலை யும்பர் கரத்தை யவர்செவிக்க
ணேற்றும் பழனச் செழுங்காவை யென்றாய் தாலோ தாலேலோ
எல்லா வுலகுஞ் சராசரமு மீன்றாய் தாலோ தாலேலோ. (1)
178.
அரும்பு முலைசிற் றிடைநுடங்கி யசையப் பரித்த கடைசியர்க
ளலர்வாய் நறவுங் குயம்பாளை யரியு நறவு மருந்துமள்ளர்
கரும்பு வடித்த தீஞ்சாறு கதலிப் படப்பை புகுந்துநெடுங்
கமுகம் படப்பை யுலவியிளங் கன்னற் படப்பைத் தூரகழ்ந்து
சுரும்புமடுக்கு முளரிமடுச் சுருங்கப்பெருகிச் சலதியுவர்த்
தோயங் கலக்க முகின்மேய்ந்து சொரியும் புவன மினிப்பவறிந்
திரும்பு வனந்தாழ் வயற்காவை யென்றாய் தாலோ தாலேலோ
எல்லா வுலகுஞ் சராசரமு மீன்றாய் தாலோ தாலேலோ. (2)
179.
நெரிந்து சரிந்து நெய்த்திருண்டு நீண்டு சுருண்டு மகரந்த
நிமிரத் திமிர்ந்து நறியபனி நீரி னனைந்து குழன்மடவார்
பரிந்து குடையு மணமஞ்சட் படுநீர் பாய்ந்து தழைத்தசெழும்
படைப்பைக் கதலிப் பசுங்குருத்தொண் பரிதிக் கடவு டனைமுடுக்கி
விரிந்து படுக்க நிலம்படுத்த மென்பூத் தருந்தேன் மிஞிறருந்தி
மிடறு திறந்து பாண்மிழற்ற விரைப்பங் கயந்துஞ் சனந்துயிலா
திரிந்து மறுகும் வயற்காவை யென்றாய் தாலோ தாலேலோ
எல்லா வுலகுஞ் சராசரமு மீன்றாய் தாலோ தாலேலோ (3)
180. உடுக்கும் படங்க வுகள்கயலா வொற்றை யாழி வையமுமிந்
தூரு மொளிர்மா னமும்விரைய வோடுங் கலமாச் சலராசி
மடுக்குங் கனங்கள் பச்சொளிச்சை வலமா வொளிகள் சலஞ்சலமா
மருவி மிதப்ப வுடற்கண்ணன் மனையூற் றெடுப்ப வுயர்ந்துமால்
படுக்கும் பாயல் பின்னோடப் பயத்தன் பயத்த னாகவுடற்
பரிய மகரஞ் சரியவலை பாய்ந்து பாரை யகழ்ந்து பெருக்
கெடுக்கும் பொன்னித் தடங்காவை யென்றாய் தாலோ தாலேலோ
எல்லா வுலகுஞ் சராசரமு மீன்றாய் தாலோ தாலேலோ. (4)
181.
கங்கு லனைய குழல்காட்டுங் கலாபத் தோகை கடுப்பாருங்
கருங்கண் மழவே றனையாருங் கலவிப் பூச லயரவனை
கொங்கு மலிதே மலர்மாலை கொட்டுந் துகளுஞ் சிதறுசுண்ணக்
குவையு நறுங்குங் குமத்தூளுங் குண்டுக் கிடங்கர் நிரைதூர்த்துப்
பொங்கு மதவெண் டிகையானைப் புழைக்கை மடுத்துக் கோட்டெயின்மீப்
பொலியுங் கொடிகள் கிழித்தவழிப் புயல்வான் புகுந்து பொன்னுலக
மெங்கு மணக்குந் திருக்கவை யென்றாய் தாலோ தாலேலோ
எல்லா வுலகுஞ் சராசரமு மீன்றாய் தாலோ தாலேலோ. (5)
வேறு.
182.
இரசத வரையமர் பவள விலங்க லிடம்படர் பைங்கொடியே
யிமையவர் மகிழ்வொடு புகழுஞ் சிமயத் திமயம் வரும்பிடியே
சரணினை பவருட் டிமிரஞ் சிதறச் சாரு மிளங்கதிரே
சதுமறை யானு மளப்பரி தான தயங்குபெர் லாமணியே
மரகத வரையிள கியவெழி லெனவெழில் வாய்த்த செழுஞ்சுடரே
மதுரித நவரச மொழுகக் கனியும் வளத்த நறுங்கனியே
தரணி மிசைப்பொலி தருமக் குயிலே தாலோ தாலேலோ
தழையுந் தந்தி வனத்தமர் மயிலே தாலோ தாலேலோ. (6)
183.
அங்கம் புளகுற் றுருகுவ ரிதையத் தலிரும் விளக்கொளியே
யறிதற் கரிய பரஞ்சுட ராயவெ னையர்க் கொருதுணையே
பொங்குங் கதிர்மணி யணிகள் சுமந்தவிர் புண்ணிய மென்கொடியே
பொய்ய ரகத்து மினிக்கு மினிப்புறு புத்தமு தச்சுவையே
கொங்குந் திணர்விரி பைந்தொடை நிம்பர் குலத்துறு செந்தேனே
கோகன கச்சின கரமொரு வாவிரு கோதைய ருக்கரசே
தங்குங் கருணை மலர்ந்தெழு கொம்பே தாலோ தாலேலோ
தழையுந் தந்தி வனத்தமர் மயிலே தாலோ தாலேலோ. (7)
வேறு.
184.
சயிலத் தரசற் கொருபுத் திரியே வானாள் வார்தாயே
தழலைத் தருகட் பரமற் றுணையே நாயேன் மாவாழ்வே
கயலைக் கடுவைக் கணையைக் கவினார் மாகா வார்கார்சேர்
கடலைப் பிணையைக் கடுகிக் குழைதோய் காதொ டேமோதா
வுயர்பொற் குமிழிற் குதியுற் றொளிகூர் கோமா னேதேனே
யுவமித் திடுதற் கருமைக் குயிலே தூயோ ராய்மாயா
மயலற் றவருட் படுமெய்ப் பொருளே தாலோ தாலேலோ
மதவெற் பமற்பொற் பதியுத் தமியே தாலோ தாலேலோ. (8)
வேறு.
185.
தானந தம்படு வெண்கரி தாழா வீழாமே
தானவர் மங்கையர் மங்கல நீணாள் வாழாமே
வானவர் நங்கைய ரங்கைகள் வார்மேன் மோதாமே
வாள்விழி யஞ்சசி வன்றுய ரூடே போதாமே
தேன்மலி பைந்துண ரைந்தரு வார்வேர் காயாமே
தேகம டங்கலு மம்பக னார்போய் மாயாமே
கான்முளை யொன்றருள் பைங்கிளி தாலோ தாலேலோ
காவை யமர்ந்த கருங்குயில் தாலோ தாலேலோ. (9)
வேறு.
186.
இருவர்க் கரியவெ னப்பனிடத்தவள் தாலோ தாலேலோ
விமயத் தலைவனு யிர்த்தமடப்பிடி தாலோ தாலேலோ
கருணைக் கடல்பெரு கப்பொலிகட்குயில் தாலோ தாலேலோ
களகப் பிடரிவ ரத்தியளித்தவள் தாலோ தாலேலோ
பொருநைத் துறையர்கு லத்தைவிளக்கினள் தாலோ தாலேலோ
புணரித் துறைவரு புத்தமுதொத்தவள் தாலோ தாலேலோ
மருமிக் கெழுதுள வற்பினுத்திதவள் தாலோ தாலேலோ
மதவெற் பமரும் வனத்தமர்பொற்கொடி தாலோ தாலேலோ. (10)
தாலப்பருவம் முற்றிற்று.
சப்பாணிப்பருவம்.
187.
செய்யதே மலர்மருவு நீலத்தி னெண்காந்தள் சேர்ந்தெனப் பின்கூழைவாய்ச் -
செங்கையொன் றுறவொருகை யிருகடன் மறைக்கத் தெரிந்தன ளெனப்பொதிகையா,
நெய்யுமோர் பைந்துழாய்க் கோலிருகை சேமித்த தெறுழதன் றொருகையிவ -
ளிருகோன் மறைத்தவலி நன்றுநன் றெனமகிழு மெந்தையொடு மகிழநறவம்,
பெய்யுநாண் முளரிமலர் வலியவொரு கமலம் பிறந்தகீ தத்தையடையும் -
பெற்றிபோற் சிற்றிடை நுடங்கக் கடங்கால் பிறங்கல்வழு திப்பொன்மனையிற்,
றையலார் மைக்கண் புதைக்குங்கை சேர்த்தம்மை சப்பாணி கொட்டியருளே -
தண்ணாவ லோர்புகழும் வெண்ணாவலூரரசி சப்பாணி கொட்டியருளே.(1)
188.
கந்தமலி நெட்டித ழவிழ்க்கும்வெண் டாமரைக் கவின்மயிலி முவரிபடியுங் -
காளமே கத்தினா கத்துமோ கத்தெண கடற்கட் சனித்தகுயிலும்,
வந்திரு மருங்குநின் றைம்பான் முடித்துநறு மாலைசெரு கிக்குனிநுதல -
மணநரந் தந்தூரி யங்கொண்டு தீட்டிமதர் மாழையுண் கட்குமையிட்,
டந்தர மடந்தையர் பணிந்துபுடை சூழமணி யணிபல வணிந்துநெடுவா -
னளவிய மணக்கா வணத்திருத் தத்தழன்மு னாவரைக் கரையனெனுமுன்,
றந்தைதர வெந்தையார் தொட்டகை முகிழ்த்தம்மை சப்பாணி கொட்டியருளே -
தண்ணாவ லோர்புகழும் வெண்ணாவ லூரரசி சப்பாணி கொட்டியருளே. (2)
189.
கலைமணக் குங்கொடிக் கொருபீட மானநாக் கடவுளொரு வாதமர்ந்த -
கமலபீ டமுமகில மகளிடை பொதிந்தபூங் கலைவயி றுளைந்துயிர்த்த,
சிலைமணக் குஞ்சிறு நுதல்சின கரப்பூஞ் செழுங்கபா டந்திறக்குந் -
திறவுகோ லைச்செங் கருங்கரள வரவெனச் சென்றொளி கவர்ந்தபடையா,
னலைமணக்கு திருப் பாற்கடலும் வேற்கணயி ராணியின் பந்திளைக்கு -
மண்ணலைத் தாங்குசிறு கண்ணநாற் கோட்டுவெள் ளருவிச் சிலம்புநின்றா,
டலைமணக்கும்படி வணங்குவோர்க் கருள்கைகொடு சப்பாணி கொட்டியருளே -
தண்ணாவ லோர்புகழும் வெண்ணாவ லூரரசி சப்பாணி கொட்டியருளே. (3)
190.
அருமறைக் கிழவன்முத லைவருக் குந்தொழில்க ளைந்தெண்ண லளவைசெய்ய -
வைவிரல் படைத்தகை யாற்சுட்டி னோடவர்க் கத்தொழில் காட்டுகையாற்,
பருமுலை மருப்புற வளைக்குறி படத்துகிர்ப் பட்டகோ டீரமுடியெம் -
பரமனைத் தழுவுகை யால்வள ரறங்கண்முப் பத்திரண் டும்புரிகையாற்,
குருமணி குயிற்றிய விருங்கங்க ணக்கையாற் கொடியேனை யஞ்சலென்ற -
கோலக்கை யான்மடப் பொய்தற்பி ணாக்களொடு குளிர்பனி வரைச்சோலைதண்,
டருநறவு கொட்டுமலர் கொய்யுங்கை யாலம்மை சப்பாணி கொட்டியருளே -
தண்ணாவ லோர்புகழும் வெண்ணாவ லூரரசி சப்பாணி கொட்டியருளே. (4)
191.
பாகமுற வம்மைநினை வைத்தவெம் மான்கரப் பால்வைத்த மான்மருண்ட -
பார்வைகொண் டதுகொலைச் சிலைவேடு கூடும் பருப்பதந் தோறுமாடு,
மேகமுற ழுங்குழற் சிறுகுறவர் சிறுமிவாய் மிக்கமோ கப்புலவுலாம் -
வேற்குழவி யெனுமருக னருகுறைவ தற்கன்று விரவிநங் கைப்பட்டதா,
லேகவரி தெனநினைத் தன்றுனா லெனவொளி ரிணைக்கணெழு கருணைவெள்ள -
மெங்கும் பரந்தப் பரற்குமீ திட்டடிய ரிருவினையை வாரியோடக்,
கோகனக மதின்முளைத் தாலெனப் பொலிகையாற் கொட்டியருள் சப்பாணியே -
கொடிவிரவு கடிமதிற் காவையிம யப்பாவை கொட்டியருள் சப்பாணியே. (5)
192.
வெள்ளன மெனத்தமிழ்க் கூடல்வாழ் கைதவன் விழுப்பெறவுதித் தெதிர்த்த -
வேளைத் தழற்கணாற் செற்றவெம் மானளவில் வேடிரண் டெனவரச்செய்,
தெள்ளலில் கலாநிலா மேலாக்கி மலயவெற் பீந்ததி னரும்புமென்காற் -
கிறையாக்கி வெம்பா ரிடஞ்சூழு மென்னநற விழிநிம்ப மாலையீந்து,
கள்ளவி ழிலம்பகத் தையலா ராயங் கலந்துபுடை சூழமுடியிற் -
கவின்முடி தரித்தரி யணைக்கண்வைத் திருகயல் களிக்கநோக் காவொருகயல்,
கொள்ளென விரும்பிக் கொடுத்தகை சிவப்புறக் கொட்டியருள் சப்பாணியே -
கொடிவிரவு கடிமதிற் காவையிம யப்பாவை கொட்டியருள் சப்பாணியே. (6)
வேறு
193.
அரவப் பரிபுர மேகலை பம்பி யலம்பிப் பதறமே
அம்போ ருகமொடு வெம்போ ரிடுகர மணிவளை சிதறாமே
யிரவிற் பொலிமதி வகிரிற் சுட்டி யிரிந்தது பிறழாமே
யியல்பன் றியுமிரு கரமலர் சேந்தட லேறிக் கன்றாமே
பரவைக் கடல்சுல வுலகினி லலகில் பவக்கடல் வீழ்ந்துழலும்
பயனில் லாவெனை வழிவழி யடிமை படைத்த பிரான்மகிழுங்
குரவக் குழவி துயின்ற கரங்கோடு கொட்டுக சப்பாணி
கொம்பு படைத்த சிலம்பு வனத்தவள் கொட்டுக சப்பாணி. (7)
194.
எங்கள் பிரானடி வைத்த கருத்த ரிடர்க்கடல் வீழாமே
யெறிதிரை படுமொரு குடிஞையின் மறைமட லெதிரல தேறாமே
வெங்கன றங்கு மடத்துறு தூமம் விரித்து முழங்காமே
மெச்சு குலச்சிறை நட்ட நுனைக்கழு வீணாப் போகாமே
அங்க மலம்பு சிலம்பு கலந்தமெல் லடியல தாகாமே
அரவொலி மலிசிர புரம்வரு குழவிக் கருண்ஞா னங்கலவாக்
கொங்கை சுரந்திழி பாலமு தூட்டினள் கொட்டுக சப்பாணி
கொம்பு படைத்த சிலம்பு வனத்தவள் கொட்டுக சப்பாணி. (8)
வேறு.
195.
முமலக்கருளற வொருவினர் மனனெனு மற்புந றச்சாரு
முளரிச் சததள விளமல ருளிவிள ரிப்பண் மிழற்றோனதப்
பமரக்குலமுடி யடிபடி தரமது மிக்க பெருக்கூறும்
பதிபச் சடையுடை மரைமடல் புரையடி வைப்ப வடுப்பார
மமர்பொற் கிரியென வளரிள முலைகள்ப ரித்தெழு பொற்பாவை
யமலச் சுடரிட மருவிய வொருகொடி புத்தமு தப்பூவை
கமலக் குயில்புணர் குயில்வர வருகுயில் கொட்டுக சப்பாணி
கரடக் கடமுமிழ் கடகரி வனமயில் கொட்டுக சப்பாணி. (9)
வேறு.
196.
மலையெனவளரிரு பாரப்பூண்முலை வனிதையர்குடைபனி நீர்கட்டாமரை
மலிமடுநடுவிரை வோடிப்பாயமி குத்தபெருக்காகி
வரிவளைவயிறுளை வாகிக்கான்மணி நிலவொளியலகினி லாவொப்பாகலின்
மலர்தருகயிரவ வூறற்றேறன்ம ணத்தபணைக்கோடித்
தலைமடையகடுவி ராவிக்கீறிமுண் மடலொடுசுலவிய தாழைத்தூர்முறி
தரவெறியலையொடு வேள்கைச்சாபவ னத்தைநனைத்தேறத்
தனியுருளிரதந டாவற்சார்பில னெழுபரிபசியமெய் கீறித்தோகைக
டழையவிணளவிய தாலக்கானைம டித்துமுறுக்காலை
அலையெறிபிரசமி டாவிற்பாய்பொழு திரிசிறுதுளிபிர வாகக்காவிரி
யலைபடவொழுகிய வோதைக்கேயுண டுக்கமெடுத்தோடி
யருகொருகுளனிள மேதிச்சூன்முகி னிரைவிழவெருவுவ ரானெட்டேடலி
ழயல்வைர்கதலிகள் சாயப்பாசுநி றத்தமடற்பூகக்
குலைமிடறொடிபட வானிற்போயதென் முதிர்பலனுதிர்தர மோதித்தாவொடு
குதிகொளும்வளமலி யானைக்காமயில் கொட்டுகசப்பாணி
குரைகழலடிபடி வாழ்விற்கூடிய மனனுடையவென்முடி மீதிற்சூடிய
குனிமதிவதிசடை யாருக்கோர்துணை கொட்டுகசப்பாணி. (10)
சப்பாணிப்பருவம் முற்றிற்று.
முத்தப்பருவம்.
197.
கொதிக்குங் கவைச்செங் கொழுந்தழற்கட் குளிக்கு மெழுகொத்துருகியறக் -
குழைந்து கசிந்து கரஞ்சிரமேற் குவித்துக் கொழுநாத் தழும்பேறத்,
துதிக்கு மடியா ருளக்கோயிற் றூண்டாவிளக்கே மெய்ஞ்ஞானச் -
சுடரே யமலச் சுடர்க்கொருவாத் துணையே யிணையின் மணியேய,
திதிக்கு மொருகா சிபற்கும்வருஞ் சிறுவர் மணிந்து கரங்கூப்புஞ் -
சிலந்தி பணிந்த நகரில்வளர் செழும்பூங்கொம்பே சிரபுரச்சந்,
ததிக்கு முலைப்பான் முன்னளித்த தாயே முத்தந் தருகவே -
சயிலத் தரசன் றவத்திலவ தரித்தாய் முத்தந் தருகவே. (1)
198.
கன்னே ருள்ளங் கரைந்துருகக் கரைவித் தொருபைந் தருவறைந்த
கருந்தா தணி யெனக்கசிவு காணக் கடையேன் றனைப்புரந்த
பொன்னே பளகற் றொளிகாலும் பொல்லா மணியே மெய்ஞ்ஞானப்
பொருளே யருளெண் ணாங்கறமும் பூத்த கொடியே பொற்கொம்பே
மின்னே மழலைப் பசுங்கிளியே வெள்ளோ திமமே கருங்குயிலே
வேம்பர் குடிக்கோர் செங்கரும்பே வெள்ளை நாவ லடிமுளைத்த
தன்னே ரிலிக்குத் துணைவருமென் றாயெ முத்தந் தருகவே
சயிலத் தரசன் றவத்திலவ தரித்தாய் முத்தந் தருகவே. (2)
199.
பொங்குங் கருணைப் புதுவெள்ளப் புணரியெழுந்து திரையெறிந்து
பொறிபோ நெறியி லுளஞ்செலித்தாப் புனித வடியர் குழாமடுக்க
வெங்கும் பரந்து பெருக்கேற நெனையாள் வாத வூரடிக
ளியற்செந் தமிழின் னமுதருந்து மெங்கோன் செவிகள் குளிர்தூங்கக்
கொங்குந் திணர்கொள் பொங்கர்வனக் குயினாண் பொருந்த மதர்நோக்கங்
கொள்ளா வதனங் கோட்டிநறுங் குதலை ததும்பப் பேசுநறாத்
தங்குங் குமுத மலர்வாயாற் றாயே முத்தந் தருகவே
தானப் பொருப்பு வனந்தழையத் தழைந்தாய் முத்தந் தருகவே. (3)
200.
போதார் நினது பொன்னடியிற் புரமூன் றெரித்த வெம்மிறைவன்
புலவி தீன்ப்பான் வணங்கமுடிப் பொலியுங் குடிலத் துகிர்க்கொடியுங்
காதார் வளையுங் கமடமுமேற் காணப் பரந்து பெருக்கெடுத்த
கங்கைப் புணரி நாறுமதிக் கலையைச் சிறிது கண்ணுற்று
மீதார் நாணுற் றவண்சிறிது மென்றாட் கமலஞ் சுருங்கமகிழ்
வேரிக் குமுத மலர்கடுப்ப வெள்ளி முறுவல் சிறிதரும்புந்
தாதார் தளவஞ் செறிவாயாற் றாயே முத்தந் தடுகவே
தானப் பொருப்பு வனந்தழையத் தழைந்தாய் முத்தந் தருகவே. (4)
201.
வண்ணங் கரிய முகிலுயிர்த்த மணிமுத் தம்மே நீயுயிர்த்த
மணிமுன் றளைந்து பிணிக்கவுரு மாறிப் போன் முத்தமலை
நண்ணம் புவரி முளைத்தமதி நளிர்முத் தொளிர்முத் தமிழ்க்குரிய
நால்வர்க் கசைக்கு மைந்தலையுன் னாதனடிக டேய்த்தமுத்தம்