* காப்புப்பருவத்திலுள்ள பதினொருபாடல்களில் ஏனைப்பிள்ளைத்தமிழ்களிற் கூறுவதுபோலத் திருமால்முதலியவர்களைக் காப்பாகக்கூறாமல் இந்நூலிற் சேவையர்காவலர்க்குத் திருத்தொண்டர்களைக் காப்பாகக் கூறத்தொடங்கிய இந்நூலாசிரியர் இப்பருவத்தில் அவர்களைத் திருத்தொண்டத்தொகைச் செய்யுள்முறைப்படி பாராட்டிக் கூறுகின்றனரெனக்கொள்க.
------------------------------------------------------------------------------------
"இலைமலிந்தவேனம்பி"
725.
இலைமலி யெனுங்கவியு ளெழுபுவன மும்பரசு மெழுமுனிவ ரேத்தவமர்வா -
(இது பழையபதிப்பைச்சார்ந்தது. [பதிப்பித்தகாலம், கி.பி. 1876])
இது திருவாவடுதுறை ஆதீனத்து அடியார்குழாத்தொருவரும், இந்நூலாசிரியரிடத்திற் கல்விபயின்றவருமாகிய
ஆறுமுகச்சுவாமிகளியற்றியது.
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
825.
சீர்பூத்த பாலாற்றின் புனல்பரந்து காலாற்றிற் சேற லாலே,
பார்பூத்த குடிதழைப்பப் பலவளனு மாங்காங்குப் பரவ வாக்கிக்,
கூர்பூத்த வறிவான்மிக் கோர்பலரைத் தழுவியௌவை கூறுங் கூற்றை,
நார்பூத்த நாடொறும்பார் நிறுவிவருந் தொண்டைவள நாட்டின் மாதோ. (1)
826.
மன்னியசீர் மறையொலியுந் தமிழ்வேத மறையொலியும் வயங்குசீர்த்தி,
துன்னியவா சகவொலியுந் தொண்டர்கள்செய் யரவொலியுந் துவன்றியெங்கு,
முன்னியமற் றவர்க்குவே ளாண்குலத்தோ ருபசரிக்கு மொலியு மேன்மேன்,
மின்னியகா லந்தொறும்விண் ணாடுசெவிடுறச் செய்குன்றை வியனூர்தன்னில். (2)
827.
நிலந்தழைப்ப வெண்ணீற்று நெறிதழைப்ப வஞ்செழுத்து நிலவி மேன்மேல்,
வலந்தழைப்ப வுயர்சைவம் வலிதழைப்ப மறுசமயம் வறப்பத் தொண்டர்,
புலந்தழைப்ப வடியேம்விண் டலந்தழைப்ப நலந்தழைப்பப் பொலிவேளாளர்,
குலந்தழைப்பச் சேவையர்கள் குடிதழைப்பத் தமிழ்தழைப்பக் குறிப்பாருய்ய. (3)
828.
உலகுய்யத் திருத்தில்லை நடநவில்வார் திருவருளா லொருவர் வந்து,
கலவுபுகழ்ப் பாலறா வாயர்முனந் தோன்றியருட் கார ணார்த்தம்,
விலகிலருண் மொழித்தேவ னெனும்பிள்ளைத் திருநாமம் விளங்கிப் பின்பு,
சுலவுசேக்கிழார் மரபு விளக்கலிற்சேக் கிழாரெனும்பேர் துலங்கப் பூண்டு. (4)
829.
காற்றுபகை யநபாய னமாத்தியராய்ப் பெருமுதன்மை கதிர்ப்பப் பெற்றுத்,
தோற்றுபுறச் சமயமெலா மொருங்கவிய வென்றருளித் தொழுவார்க் கன்பு,
தேற்றுதில்லை நடராசர் முதலருளத் திருத்தொண்டர் திருப்புராண,
மாற்றுமல மருந்தெனவாய் மலர்ந்தருளும் பெரும்புகழார் மலர்ப்பூந் தாளில். (5)
830.
தேக்குபுகழ்ச் சோணாட்டிற் றிரிசிரா மலையின்மிகு திருவ மோங்குந்,
தூக்குபுகழ் வேளாளர் குலாம்புதியிற் சிதம்பரவே டுலங்கப் பன்னா,
ளாக்குபுக ழெனத்தோன்றிப் பலகலையு மொருங்கேயாய்ந் தான்றோர் பல்லோர்,
வீக்குபுகழ் பரந்தகயி லாயபரம் பரையாகி விளங்கா நின்ற. (6)
831.
எங்கடுறை சையையடைந்தம் பலவாண தேவனடி யினிது சூட்டத்,
துங்கமுடி வாய்ந்துசிவ ஞானகலை யகங்கை நெல்லித் தோற்றத் தாய்ந்து,
கங்கைதரித் தருள்சடையோன் பலதலத்து மான்மியந்தன் கருத்தி னோர்ந்து,
சங்கையில்செந் தமிழன்மொழி பெயர்த்தியற்றுங் கடப்பாட்டிற் றலைமையானோன். (7)
832.
மின்னுமர னடியன்றிக் கனவிலும்வே றெண்ணாத விரதம் பூண்டோ,
னின்னுமெம்போ லியர்பலருக் கிலக்கியமு மிலக்கணமு மௌிது தந்தோ,
னன்னவன்பேர் மீனாட்சி சுந்தரநா வலவனென வாய்ந்தோ ரியாரும்,
பன்னுபுகழ் பூதலமு மீதலமும் பாதலமும் பரவ நின்றோன். (8)
833.
மற்றவர்மான் மியப்பெருமை யருமையுட னுளத்துணர்ந்து மகிழ் பேரன்பாற்,
கற்றபய னின்றடைந்தோ மிம்மைமறு மைப்பயனுக் கதிர்க்கு மீதென்,
றுற்றருமை பெருமைதொண்டர் புராணவிரா சியமுழுது மொருங்கே தோன்றச்,
சொற்றபிள்ளைத் தமிழெனவோர் பாமாலை தொடுத்தனன்மெய்த் துறவோர் போற்ற. (9)
834.
வென்றபுக ழினையார்மான் மியந்தமிழால் விரித்தருளு மேன்மையாள,
ரொன்றுபுகழ் மரபிலுளா ரிதுநயத்தற் குரியரென வுவந்து சான்றோர்,
நன்றுபொலி துறைசையிற்சுப் பிரமணிய குருமணியுண் ணயந்து நன்றென்,
றென்றுமுடி யடிகடொறுந் துளக்கவவை வியக்கவரங் கேற்றினானே. (10)